யட்சியின் மரணம்
யட்சி மறைந்தது!
ஒப்பனையலங்காரத்தில் பொதிந்த
கொழுத்த மார்பும்,
கொழுகொழுத்த தொடைகளும்,
நரம்புத்தடயங்களும்,
பறவைகள் கொத்திக் கிழித்தது,
விழிகள் நிலைத்தது,
சுற்றங்களோடி மறைந்தது,
சாட்சியான காலம் மௌனத்திலாண்டது,
சுயமதிப்பை மேன்மைப்படுத்த,
இன்றும் அந்த யட்சியின் ஆன்மா
கனவைச் சுமக்கும் நாடோடியாய்
என்னிலிருந்து, உன்னிடத்தும்
உன்னிலிருந்து, பிறரிடத்துமாய்.....
இரை
என்ன வன்முறையிது!
ஒரு பெண்ணை இப்படிக் காயப்படுத்துவதா?
பதினைந்து பதினாறு வயதில் துவங்கியதல்லவா இந்த வன்முறை
யட்சி மறைந்தது!
ஒப்பனையலங்காரத்தில் பொதிந்த
கொழுத்த மார்பும்,
கொழுகொழுத்த தொடைகளும்,
நரம்புத்தடயங்களும்,
பறவைகள் கொத்திக் கிழித்தது,
விழிகள் நிலைத்தது,
சுற்றங்களோடி மறைந்தது,
சாட்சியான காலம் மௌனத்திலாண்டது,
சுயமதிப்பை மேன்மைப்படுத்த,
இன்றும் அந்த யட்சியின் ஆன்மா
கனவைச் சுமக்கும் நாடோடியாய்
என்னிலிருந்து, உன்னிடத்தும்
உன்னிலிருந்து, பிறரிடத்துமாய்.....
இரை
என்ன வன்முறையிது!
ஒரு பெண்ணை இப்படிக் காயப்படுத்துவதா?
பதினைந்து பதினாறு வயதில் துவங்கியதல்லவா இந்த வன்முறை
அறையில்,வகுப்பறையில்,
குளியலறையில், மாந்தோப்பில்,
மைதானத்தில்,ஏன் தூக்கத்தில் கூட இப்படி!
ஏன் என்னைப் பின்தொடர்கிறாய்
நாட்காட்டி பதினைந்து மாற்றிவிட்டேன்
தலைமுடியில் சுண்ணாம்புக்காற்று வீசத் துவங்கிவிட்டது
இப்போதும் நான் உன்னுடைய இரையா?
நீ ஏற்படுத்தும் காயங்கள் எனக்கு நீங்காத துக்கம்
இது பாலியல் வன்முறை!
அம்பும் வில்லுமாய் என்னில் இறங்கிக்கொண்டேயிருக்கும்
காமதேவா திஸ் இஸ் டூ மச்
நீ பார்த்தாயா?
பெற்று வளர்த்தவரின்
தனிமைச் சங்கமத்தில்
சுவரை உடைத்தும்,
ஓட்டை விலக்கியும்,
கட்டிலுக்கடியில் மறைந்தொளிந்தும்,
மறைகண்ணால் பார்த்த நீ
திகைத்துப்போயிருப்பாய்
இல்லையெனில்
எப்படி இவ்வாறு
எங்கள் படங்களுக்கடியில் வந்து
எண்ணெய் முடிந்து விட்டதை
எண்ணி வருந்துகிறாய் நீ?
கோலாட்டம் என்று
உறுதிப்படுத்துகிறாய் நீ?
நீ பார்த்தாயா?
குளியலறையில், மாந்தோப்பில்,
மைதானத்தில்,ஏன் தூக்கத்தில் கூட இப்படி!
ஏன் என்னைப் பின்தொடர்கிறாய்
நாட்காட்டி பதினைந்து மாற்றிவிட்டேன்
தலைமுடியில் சுண்ணாம்புக்காற்று வீசத் துவங்கிவிட்டது
இப்போதும் நான் உன்னுடைய இரையா?
நீ ஏற்படுத்தும் காயங்கள் எனக்கு நீங்காத துக்கம்
இது பாலியல் வன்முறை!
அம்பும் வில்லுமாய் என்னில் இறங்கிக்கொண்டேயிருக்கும்
காமதேவா திஸ் இஸ் டூ மச்
நீ பார்த்தாயா?
பெற்று வளர்த்தவரின்
தனிமைச் சங்கமத்தில்
சுவரை உடைத்தும்,
ஓட்டை விலக்கியும்,
கட்டிலுக்கடியில் மறைந்தொளிந்தும்,
மறைகண்ணால் பார்த்த நீ
திகைத்துப்போயிருப்பாய்
இல்லையெனில்
எப்படி இவ்வாறு
எங்கள் படங்களுக்கடியில் வந்து
எண்ணெய் முடிந்து விட்டதை
எண்ணி வருந்துகிறாய் நீ?
கோலாட்டம் என்று
உறுதிப்படுத்துகிறாய் நீ?
நீ பார்த்தாயா?