-->

அண்மை

சாலையோர சந்திப்புகள் - கு.பத்மநாபன்

சாலையோர சந்திப்புகள்
ஓவியம் - சாய் அரிதா

சாலையோர சந்திப்புகள் 

கடிகார முள்ளுக்குப் பயப்படாமல் காத்திருக்கும்
பக்கத்துத் தெருவில்
எனது
தடியோசை கேட்கும் போதே
எனக்குக் கேட்கும்
உறுமல் சத்தம்
குரலைக் கேட்டே
எதையும்
புரிந்து கொள்ள முடியும்
நான்  அடிக்கவும்
அவை கடிக்கவும்
போவதில்லை
என்றாலும்
சடங்குக்குக் குறைப்பவைகளை
சந்திக்கும்போதெல்லாம்
ஏதாவது
கவிதை எழுத வேண்டும்
என்று
மனசுக்குள் உறுத்தும்
_

தட்டும் தடி ஓசை தாளமாக அமைய,
இல்லாத கண்கள் பின்னணியில் அலற,
அழுதுவிட்டு செல்கிறான் வாழ்க்கையை.
துணியோ தடியோ
படாமல்
ஒதுங்கும்  என்னை
இயக்குவது
எதுவாகவும் இருக்கலாம்.
அப்பாவிடம்
தருமம் செய்ய
எப்படிச் சொல்வது?
இரு காலும்
ஒரு  கோலும்
இருக்கும் நானே
ஒரு
தருமம்தான்
என்று
ஆகிவிட்டபோது?
Author Picture

கு.பத்மநாபன்

கவிஞர் கு.பத்மநாபன், எழுத்தாளர், திறனாய்வாளர், மொழிபெயர்ப்பாளர், ஆந்திர மாநிலம், குப்பம் திராவிடப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருக்கிறார்

Post a Comment

முந்தைய பதிவு அடுத்த பதிவு