வணக்கம்.
பார்வையற்றோருக்கான அறிவேதுணை ஆய்வு மையம், தனிச்சொல் மற்றும் திண்டுக்கல் மறைமாவட்ட தொழிலாளர் பணிக் குழு (தமிழ்ப் படிப்பகம்) தோமா அருளகம் ஆகியன சேர்ந்து எதிர்வரும் ஜூன் 14-15, 2025 ஆகிய இரு நாட்கள் மாற்றுத்திறனாளருக்கான படைப்பாக்கப் பயிலரங்கைத் திண்டுக்கலில் நடத்துகின்றன.
இந்தப் பயிலரங்கில் மாற்றுத்திறனாளர்களுக்குக் கவிதை, சிறுகதை, புதினம் எழுதுவது சார்ந்து பயிற்சி அளிக்கப்படவுள்ளது. பயிலரங்கில் துறைசார்ந்த எழுத்தாளர்கள் பயிற்சி அளிப்பார்கள். பதிவுசெய்தோரிலிருந்து 20 பேர் பங்கேற்பாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு அழைப்பின்வழித் தகவல் தெரிவிக்கப்படும்.
பங்கேற்பாளர்களுக்குத் தங்குமிடம், உணவு ஆகியன ஏற்பாடு செய்யப்படவுள்ளன. பயணப்படி இல்லை.
பங்கேற்க விரும்புவோர் கீழ்க்காணும் படிவத்தை நிரப்பி அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.